close
Choose your channels

ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறுகிறது நயன்தாரா படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Tuesday, December 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

94வது ஆஸ்கார் விருதுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த திரைப்படம் தகுதி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இந்த விருதில் சிறந்த வெளிநாட்டு படம் விருதுக்காக 93 நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே படம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வினோத்ராஜ் இயக்கிய ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆஸ்கார் விருதுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தகுதி பெற்றுள்ள வெளிநாட்டு படங்களிலிருந்து 15 படங்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் என்றும் அதிலிருந்து ஒரு சிறந்த திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருதை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்த ’கூழாங்கல்’ படத்திற்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.