close
Choose your channels

இரட்டை குழந்தைக்கு பெயர் வைத்தவுடன் நயன் - விக்கி சென்றது எங்கே தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

Wednesday, April 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு சமீபத்தில் பெயர் வைத்த நிலையில் தற்போது இருவரும் குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இரட்டை குழந்தைகளின் பெயர்களை அறிவித்தார் என்பதும் அந்த பெயர்கள் உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் N என்பது உலகின் சிறந்த தாயான நயன்தாராவை குறிக்கும் என்றும் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கும்பகோணம் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றனர். சென்னையில் இருந்து திருச்சி வரை விமானத்தில் சென்று அவர்கள் அதன் பின் காரில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர் என்றும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே திருமணமான புதிதில் இருவரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்ட நிலையில் தற்போது குழந்தைகளுக்கு பெயர் வைத்த நிலையில் குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோவிலுக்கு சென்ற போது அவர்களுடன் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.