close
Choose your channels

மகாபலிபுரம் சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா: எதற்கு தெரியுமா?

Tuesday, May 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாகவும், இந்த திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அவ்வப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஜோடியாக வெளியே சென்று வரும் நிலையில் சமீபத்தில் மகாபலிபுரம் சென்றதாக தெரிகிறது

மகாபலிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ரெஸ்டாரண்டில் இருவரும் பிரியாணி மற்றும் மீன் வகைகளை சாப்பிட்டதாகவும் மகாபலிபுரத்தில் உள்ள புராதன சிறப்புமிக்க சுற்றுலா பகுதிகளை சுற்றி பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வரும் இந்த நட்சத்திர ஜோடி விரைவில் திருமணம் செய்யவிருப்பதை அடுத்து ரசிகர்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.