close
Choose your channels

நயன்தாராவை ஒரு மணி நேரம் அழவைத்தவர் யார் தெரியுமா?

Friday, January 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் ரஜினி, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கிவரும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாரா தன்னை ஒருவர் ஒரு மணி நேரம் கதறி அழு வைத்த சம்பவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது;

தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோ‌ஷமான வி‌ஷயம் என்றால் தனது அண்ணன் மகள் ஏஞ்சலினா பிறந்ததுதான் எனவும், மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து, சந்தோ‌ஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏஞ்சலினா தன்னுடன் இல்லாமல், துபாய் சென்றுவிட்டதாகவும், அதை நினைத்து தான் ஒரு மணி நேரம் அழுததாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.