3 வருஷம் ஆயிருச்சு.. என் இனிமையானவருக்கு நன்றி: நயன்தாராவின் எமோஷனல் போஸ்ட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா ’என் இனியவரின் படத்தில் நடித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது என்று, ’காத்து வாக்குல ரெண்டுகாதல்’ என்ற படத்தின் மூன்றாவது வருட நிறைவு விழாவில் எமோஷனலாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு உள்ளார். அந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.
அனிருத் இசையில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு பெற்ற நிலையில், நேற்றுடன் இந்த படம் வெளியாகி மூன்று வருடம் நிறைவு பெறுகிறது.
இதனை அடுத்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ’என் இனியவரின் இயக்கத்தில் உருவான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ரசிகர்களுக்கு எனது நன்றி. ஏகப்பட்ட பேர் இது குறித்து எனக்கு வாழ்த்து தெரிவித்து மெசேஜ்களை அனுப்பி உள்ளீர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. மூன்றாவது வருட ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை கொண்டாடுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments