நயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். புதிய வரவு நடிகைகளும் ஏற்கனவே உள்ள நடிகைகளும் அவரது இடத்தை அசைக்க முடியாத நிலையே தற்போது வரை உள்ளது. இளம்  நடிகைகளுக்கு இணையாக இன்றும் அவர் பிசியாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ரஜினி, கமல், அஜித் நடிக்கும் அடுத்த படங்களில் நடிக்கவும் அவரது பெயர் பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில் இன்று நயன்தாரா ரசிகர்களுக்கு டபுள் விருந்து கிடைக்கும் நாளாக அமைந்துள்ளது. நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் இடம்பெற்ற பாடலான 'விளம்பர இடைவேளை' என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கன்வே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த விருந்து கிடைத்த இரண்டு மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணிக்கு நயன்தாரா நடித்து வரும் இன்னொரு திரைப்படமான 'கோலமாவு கோகிலா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது. ஒரே நாளில் நயன்தாராவின் இரண்டு படங்களின் புரமோஷன்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரு படங்களின் ரிலீஸ் குறித்த விபரங்களும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்த ஆண்டின் முதல் ஹிட் படத்தின் சென்னை வசூல் நிலவரம்

2018ஆம் ஆண்டில் விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்திகரமான லாபத்தை கொடுத்த முதல் படம் என்ற பெருமை சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு 2' திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: இதுவரை பெற்ற விருதுகளின் விபரம்

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளின் விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 62' படத்தில் திடீரென இணைந்த வரலட்சுமி

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிந்தன

ஜெயலலிதா நினைவிடத்தின் பாதுகாப்பு போலீஸ் திடீர் தற்கொலை! காரணம் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் உள்ளது. இந்த நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.