close
Choose your channels

நயன்தாரா செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஆர்கே செல்வமணி

Saturday, April 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருமானம் இன்றி வாடும் பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர்கள் பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து உதவி செய்து வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் நடிகர்கள் பெரும்பாலானோர் தொழிலாளர்களுக்கு நிதி உதவி செய்த போதிலும் நடிகைகள் மிகச் சிலர் மட்டுமே இதுவரை நிதி உதவி செய்துள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்கனவே ரூபாய் 1 லட்சம் கொடுத்துள்ள நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்களும் ரூபாய் 20 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்காக கொடுத்துள்ளார்

நயன்தாராவின் இந்த உதவிக்கு பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். திரைப்பட தொழிலாளர்கள் மேல் பரிவும் பாசமும் கொண்டு அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் நடிகை நயன்தாரா அவர்கள் ரூபாய் 20 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு கைகொடுத்து உதவிய நல்ல இதயம் கொண்ட சகோதரி நடிகை நயன்தாராவுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.