பிரபல நடிகரின் 522வது படத்தில் நயன்தாரா!

  • IndiaGlitz, [Thursday,November 25 2021]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவர் நடிக்க உள்ள ’கனெக்ட்’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தை ’மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனுபம்கெர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது 522வது படம் தான் நயன்தாராவின் ’கனெக்ட்’ திரைப்படம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வாய்ப்பை தனக்கு தந்ததற்கு விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் அஸ்வின் சரவணன் ஆகியோருக்கு நன்றி என்றும் இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்ததாகவும், திறமையான டீமுடன் இணைந்து கொள்வதில் தனக்கு மிகவும் மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

'மாநாடு' படம் எப்போது ரிலீஸ் என்றே எனக்கு தெரியாது: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சிம்பு நடித்த 'மாநாடு' படத்திற்காகவே திரையரங்குகளில் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான

'மாநாடு' ரிலீசுக்கு கடைசி நேரத்தில் உதவி செய்தவர் இவரா? வைரலாகும் டுவிட்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று ரிலீஸ் ஆகியது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? டுவிட்டரில் கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயன்!

சிம்புவின் 'மாநாடு' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன் பதிவு செய்த டுவிட்டில், 'இப்ப சொல்லுங்க, நான் பண்ணினது தப்பா சார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சூப்பர் ஹீரோ, புரியாத புதிர், ஆட்டோ மீட்டர்: போட்டியாளர்கள் குறித்து சஞ்சீவ் கணிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆகி உள்ள சஞ்சீவ் சக போட்டியாளர்கள் கணிப்பு குறித்து கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரோமோ வீடியோவில் உள்ளது.

விஜய் பிக்பாஸ் நிகழ்ச்சியை பாக்குறாரா? உள்ளே வந்த போட்டியாளரிடம் சிபி கேள்வி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 53 நாட்களாக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது தான் நிகழ்ச்சி மிகவும் சுவராசியமாக சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது