பாரீஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் நயன்தாரா.. அசத்தல் புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா பாரீஸில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு சென்றுள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகி ஆக நடித்து வருகிறார் என்பதும் தற்போது கூட அவர் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ’டியர் ஸ்டூடண்ட்ஸ்’ ’மூக்குத்தி அம்மன் 2’ ‘ராக்காயி’ ‘டாக்சிக்’ உள்பட ஏழு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இன்றி சிரஞ்சீவி உடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஆக்டிவாக இருக்கும் நிலையில் தற்போது பாரிஸில் உள்ள பழம்பெரும் தேவாலயத்திற்கு சென்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தில் நயன்தாரா இருக்கும் புகைப்படங்களுக்கு சுமார் மூன்று லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பதும் ஏராளமான கமெண்ட்ஸ் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments