இன்று ரக்சாபந்தன் கொண்டாட்டம்: நயன்தாரா யாருக்கு ராக்கி கயிறு கட்டினார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,August 11 2022]

இன்று நாடு முழுவதும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது என்பதும் பலர் தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி இந்த கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

திரை உலக பிரபலங்கள் குறிப்பாக பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது சக நடிகர் நடிகைகளுக்கு ராக்கி கயிறு கட்டும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது நெருக்கமான பெண் ஒருவருக்கு ராக்கி கயிறு கட்டும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நயன்தாராவுக்கு ஒரு பெண் ராக்கி கயிறு கட்டுவதும், அந்த பெண்ணுக்கு நயன்தாரா ராக்கி கயிறு கட்டும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்

இந்த நிலையில் நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ’ஜவான்’ பிரிதிவிராஜன் நடித்த்ள்ள ‘கோல்டு’ மற்றும் சிரஞ்சீவியின் ‘காட்பாதர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் நயன்தாராவின் 75வது திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ்நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தை இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா என்பவர் இயக்கயுள்ளார். இந்த படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.

More News

கணவர் இறந்து 40 நாட்களுக்கு பின் மீனாவை வெளியே கூட்டி வந்த பிரபலம்: வைரல் புகைப்படம்

நடிகை மீனா தனது கணவர் இறந்து 40 நாட்களாகிவிட்ட நிலையில் தற்போது அவர் வெளியே வந்துள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்? 35 ஆண்டுக்கு பின் இணைகிறார்களா?

கமல்ஹாசனின் அடுத்த படத்தில் 35 ஆண்டுகளுக்குப்பின் பிரபல நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

'தளபதி 67' படத்தை அடுத்து இந்த படம் தான்: உறுதி செய்த பிரபல நடிகர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 67' படத்தை இயக்க உள்ளார். 

20 வருடங்களுக்கு முன் உடன் நடித்த பிரபல நடிகரை சந்தித்த ரம்பா: வைரல் புகைப்படம்!

நடிகை ரம்பா கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

செப்டம்பர் 6ல் நேரு விளையாட்டரங்கில் ரஜினி, கமல் பங்கேற்கும் விழா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் பங்கேற்கும் விழா ஒன்று செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளன.