நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் பெரும்பாலான படங்களில் நடித்து வந்தாலும் தனது தாய்மொழியான மலையாளத்திலும் அவ்வப்போது திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. கடந்த ஆண்டு கூட ‘லவ் ஆக்சன் டிராமா’ என்ற மலையாள படத்தில் நயன்தாரா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேலும் ஒரு மலையாள படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பதும் இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’நிழல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என்.பட்டாதிரி என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இந்த படம் அடுத்த ஆண்டு வெளிவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நயன்தாரா தற்போது ‘அண்ணத்த’, ‘நெற்றிக்கண்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

4 லட்சத்திற்கும் மேலான தமிழ் வார்த்தைகள்: மதன்கார்க்கியின் புதிய முயற்சி!

4 லட்சத்துக்கும் மேலான தமிழ் வார்த்தைகள் கொண்ட அகராதி செயலி ஒன்றை மதன் கார்க்கி தனது குழுவினருடன் இணைந்து செய்து முடித்துள்ளார்.

ஒரு முட்டை சோற்றுக்காக ஏற்பட்ட கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் எக்(ege) ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்த ஒருவர் அந்த கடையின் உரிமையாளரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பூ பாதையா? சிங்கப்பாதையா? மீண்டும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்கி விட்டார் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்

இரட்டிப்பான நீட் தேர்வு கோச்சிங் சென்டர் பதிவுகள்… மருத்துவத் துறையில் அசத்தும் தமிழக முதல்வர்!!!

தமிழகத்தின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர சிறப்பு ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் 7.5% உள்இட ஒதுக்கீட்டு திட்டத்தைத் தமிழக முதல்வர்

20 வருடங்கள் கழித்து மீண்டும் தயாரிப்பாளர் ஆகும் கே.எஸ்.ரவிகுமார்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்களின் திரைப்படங்களை இயக்கிவருமான கே.எஸ். ரவிக்குமார்,