இரட்டை குழந்தைகளுக்காக முதல்முறையாக வழக்கத்தை மாற்றிய நயன்தாரா?

  • IndiaGlitz, [Wednesday,November 09 2022]

நடிகை நயன்தாரா ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வெளிநாட்டிற்கு விக்னேஷ் சிவன் உடன் சென்று கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் வாடகை தாய் மூலம் இந்த தம்பதிகள் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பிறந்தநாள் வெளிநாட்டில் கொண்டாடப்படும் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நயன்தாராவின் 38வது பிறந்த நாள் நவம்பர் 28ஆம் தேதி வர இருக்கும் நிலையில் இந்த ஆண்டு நயன்தாரா தனது பிறந்தநாளுக்கு எந்த வெளிநாடும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. திருமணமான பின்னரும் குழந்தை பெற்ற பின்னரும் வரும் முதல் பிறந்தநாள் என்றாலும் இந்த பிறந்த நாளை அவர் தனது குழந்தைகளுடன் வீட்டிலேயே கொண்டாட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பிறந்தநாள் தினத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து ஒரு விருந்து வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அட்லீ இயக்கி வரும் ’ஜவான்’ படத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள உள்ளார். அதேபோல் அஜித் நடிக்கவிருக்கும் ’ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பை இன்னும் ஒரு சில வாரங்களில் விக்னேஷ் சிவன் தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'கைதி' பட பிரபலத்தை 'தளபதி 67' படத்தில் இணைக்கும் லோகேஷ் கனகராஜ்!

விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் ஒருபக்கம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடிக்கயிருக்கும் 'தளபதி 67' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து

குடும்பத்தோடு மதம் மாறிய தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படம்

குடும்பத்தோடு புத்த மதத்திற்கு தமிழ் நடிகர் ஒருவர் மாறியதன் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'நான் நட்சத்திரம் இல்லை: 'லவ் டுடே ' வெற்றி குறித்து பிரதீப் ரங்கநாதனின் நெகிழ்ச்சி பதிவு

'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும்

அட்வகேட்டையே அடிக்கிறான்னா இவன் டேஞ்சரான ஆள்தான்: 'பரோல்' டிரைலர்

அதிரடி ஆக்சன் திரைப்படமான 'பரோல்' என்ற படம் வரும் 11-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

'வாரிசு' படத்துடன் கனெக்சன் ஆன 'லவ் டுடே': தயாரிப்பாளரின் மகிழ்ச்சியான ட்விட்!

'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய 'லவ் டுடே' திரைப்படம் விஜய் நடித்து வரும்  'வாரிசு' திரைப்படத்துடன் கனெக்ஷன் ஆன தகவல் தற்போது வெளியாகியுள்ளது.