8 வருடங்கள் கழித்து திடீரென மீண்டும் விரதம் இருக்கும் நயன்தாரா

  • IndiaGlitz, [Monday,November 18 2019]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் நடிக்கும் படங்களில், ஏற்றுக்கொண்ட கேரக்டரில் ஒன்றிப் போய் விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால்தான் அவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2011ம் ஆண்டு அவர் ’ஸ்ரீராமஜெயம்’ என்ற படத்தில் சீதை கேரக்டரில் நடித்த போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை விரதம் இருந்தார். அது மட்டுமின்றி படப்பிடிப்பு முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து முழுக்க முழுக்க சைவ உணவுகளையே சாப்பிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் ஏற்று நடிக்கும் சீதை என்ற புனிதமான வேடத்திற்கு அவர் கொடுத்த பக்தியுடன் கலந்த மரியாதையே இந்த விரதத்திற்கு காரணம் ஆகும்

இந்த நிலையில் 8 வருடங்கள் கழித்து மீண்டும் நயன்தாரா தற்போது ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார். இதனை அடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரையும் விரதமிருந்து, சைவ உணவுகளையே சாப்பிட அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நயன்தாராவின் இந்த தொழில் பக்தி, கோலிவுட் திரையுலகினர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது

More News

தண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள் 

கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுராகி என்ற பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் தண்ணீரில் குளித்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென மூழ்கியபோது

ஜிவி பிரகாஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை என இரண்டு துறைகளிலும் பிசியாக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் 'சிவப்பு பச்சை மஞ்சள் உள்பட இதுவரை இந்த ஆண்டு மட்டும் 5 படங்கள் வெளியாகியுள்ளது

ரஜினி-கமல் அரசியலில் இணைய பேச்சுவார்த்தை: விஜய் ஆதரவு கிடைக்குமா?

சமீபத்தில் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள கமலஹாசனையும், விரைவில் அரசியலில் களம்புகவுள்ள ரஜினிகாந்த் அவர்களையும் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே

2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த திருமணமான ஒரு பெண், இரண்டு இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளதால் அவரது கணவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தம்பிகளுக்கு வழிவிடுங்கள்: கமல், ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்த எஸ்.ஏ.சி

கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் ஆட்சி செய்தது போதும் என்று நினைத்த பின்னர் தம்பிகளுக்கு வழிவிட வேண்டுமென்றும்