close
Choose your channels

நயன்தாரா பிறந்தநாளில் சிங்கப்பூர் ரசிகர் செய்த அர்ச்சனை

Wednesday, November 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர் என்பதும் அவருடைய பிறந்தநாளுக்கு திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை அடுத்து சிங்கப்பூர் ரசிகர் ஒருவர் சிங்கப்பூரில் உள்ள விநாயகர் கோவிலில் நயன்தாரா பெயரில் தேங்காய் அர்ச்சனை செய்து உள்ளார். மேலும் அவர் அர்ச்சனை செய்துள்ள ரசிதின் புகைப்படத்தை தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நயன்தாரா குரியன் என்ற பெயருடன் அவரது நட்சத்திரம் அந்த ரசீதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,.

நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’தர்பார்’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகிவரும் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் அவர் ஆர்.ஜே.பாலாஜி நடித்து இயக்கும் ’மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்திலும் டைட்டில் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.