close
Choose your channels

விஜய்க்காக கொள்கையை விட்டுக்கொடுத்த நயன்தாரா!

Monday, September 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் நடிகர்களில் அஜித்தும், நடிகைகளில் நயன்தாராவும் மட்டுமே தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் விழாக்களுக்கு வருவதில்லை என்ற கொள்கையைக் கொண்டு உள்ளனர் இருவரும் படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போதே தாங்கள் புரமோஷன் விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை கூறிவிடுவர். இதற்கு ஒப்புக்கொண்டே தயாரிப்பாளர்கள் அஜித்தையும் நயன்தாராவையும் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களான 'அறம்', 'மாயா', கோலமாவு கோகிலா' போன்ற படங்களில் நடித்தபோதும் நயன்தாரா அந்த படங்களின் புரமோஷனுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஜய்காக தனது புரோமோஷன் கொள்கையை தகர்த்துவிட்டு இந்த விழாவில் அவர் கலந்து கொள்ள இருப்பதால் இந்த நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் விஷ்ணு ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.