மும்பை ரெஸ்டாரெண்டில் நயன்தாரா.. செம ஸ்டைலிஷ் காஸ்ட்யூம்..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று மும்பையில் உள்ள புகழ் பெற்ற ரெஸ்டாரண்டில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஷாருக்கான் ’ஜவான்’ உள்பட சில படங்களில் நடித்துவரும் நயன்தாரா நேற்று மும்பையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டார். அவர் மதிய உணவை முடித்துவிட்டு வெளியே வரும் போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

செம ஸ்டைலிஷ் ஜீன்ஸ் மற்றும் டாப் காஸ்ட்யூமில் நயன்தாராவும் கருப்பு உடையில் விக்னேஷ் சிவனும் உள்ள இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மும்பையில் ’ஜவான்’ படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா சென்றாரா? அல்லது விக்னேஷ் சிவன் உடன் ஓய்வு நேரத்தை கழிக்க சென்றாரா என்பது தெரியவில்லை என்றாலும் ’ஜவான்’ படத்தின் படபிடித்தபோதும் மும்பையில் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் விஜய் சேதுபதி மற்றும் ஷாருக்கான் காட்சிகள் படமாக்கப்பட்ட வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நயன்தாரா குறித்து கருத்து தெரிவித்த ஷாருக்கான் ’அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்றும் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் அவர் பேசுகிறார் என்றும் அவருடன் நடித்தது தனக்கு மிகப்பெரிய அனுபவம்’ என்றும் தெரிவித்திருந்தார்.

More News

தனுஷின் 'வாத்தி' படம் பார்த்த என்.டி.ஆர் பாலகிருஷ்ணா.. என்ன சொன்னார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் உருவான 'வாத்தி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஒரு சில நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் என்ற மைல்கல்லை எட்டியது என்பதையும் பார்த்தோம்.

மிகப்பெரிய விபத்தில் இருந்து நூலிழையில் தப்பித்த ஏ.ஆர்.ரஹ்மான் மகன்.. அதிர்ச்சி தகவல்..!

படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில் நூலிழையில் ஏஆர் ரகுமான் மகன் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படத்தின் முக்கிய அப்டேட்.. ரிலீஸ் எப்போது?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகிய 'ருத்ரன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக

ஜெயம் ரவியின் 'அகிலன்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? 

ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அதிக பார்வையாளர்களை கொண்ட படம்.. ஜோதிகாவுக்கு முதலிடம், விஜய்க்கு இரண்டாமிடம்..!

தமிழ் திரைப்படங்கள் ஹிந்தியில் டப் செய்து யூடியூபில் வெளியான படங்களில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட படம் ஜோதிகா நடித்த படம் என்றும் இரண்டாவது ஆக விஜய் நடித்த படம் என்றும்