திருமணமான மறுநாளே மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்: யாரிடம்? எதற்காக?

  • IndiaGlitz, [Saturday,June 11 2022]

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா திருமணம் நேற்று முன்தினம் நடந்த நிலையில் நேற்று விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா நேற்று முன்தினம் திருமணம் செய்தவுடன் நேற்று அதிகாலை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தனர். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் ஏழுமலையானை தரிசித்த பின் கோவிலுக்கு வெளியே விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர். அப்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காலணி அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.

காலணி அணிய தடை விதிக்கப்பட்ட பகுதியில் இருவரும் காலணி அணிந்திருந்ததால் இதுகுறித்து விசாரணை நடத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தங்களது செயலுக்காக தேவஸ்தான அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் திருமணம் முடிந்த மறுநாள் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்ததாகவும் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் போட்டோ ஷாட் எடுக்கும் போது அவசரம் காரணமாக நானும் நயன்தாராவும் காலனி அணிந்திருந்ததை உணர வில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் கடவுளுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

More News

அருள்நிதியின் 'தேஜாவு' ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

அருள்நிதியின் 'தேஜாவு' ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடன இயக்குனர் பிருந்தாவின் அடுத்த படம்: டைட்டில் லுக் ரிலீஸ்

தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான பிருந்தா இயக்கிய முதல் படமான 'ஹே சினாமிகா' கடந்த மார்ச் மாதம் வெளியானது. துல்கர் சல்மான்,

28 வயது காதலனை மணந்த 40 வயது பிரபல பாடகி: வாழ்த்த வந்த முன்னாள் கணவர் கைது!

40 வயதான பிரபல பாடகி 28 வயது காதலனை திருமணம் செய்த நிலையில் இந்த திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்க வந்த பாடகியின் முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஹார்பர்ல்ல இருந்து அகிலனை பிரிக்கவே முடியாது: ஜெயம்ரவியின் 'அகிலன்' டீசர்

நடிகர் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர்

4 கால், 4 கை உள்ள சிறுமியின் சர்ஜரிக்கு உதவி செய்த பிரபல நடிகர்!

பிறவியிலேயே நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் உள்ள சிறுமியின் சர்ஜரிக்கு பிரபல நடிகர் ஒருவர் உதவி செய்துள்ளார்.