close
Choose your channels

சுந்தர் சியின் அடுத்த படத்தில் நயன்தாரா பட வில்லன்!

Friday, April 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா பட வில்லன் முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தர் சி நடித்து வரும் படங்களில் ஒன்று ‘ஒன் டு ஒன்’ என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. த்ரிஷா நடித்த ‘பரமபத விளையாட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கிய திருஞானம் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் சுந்தர் சி ஜோடியாக ராகினி திரிவேதி நடித்து வரும் நிலையில் தற்போது முக்கிய கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுராக் காஷ்யப் இந்தப் படத்தில் இணைந்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சுந்தர் சி ஏற்கனவே ’தலைநகரம் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது மட்டுமின்றி ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.