close
Choose your channels

திருமணத்திற்கு பின்னர் மீண்டும் நடிக்க வரும் 'நய்யாண்டி' நடிகை

Thursday, August 20, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நேரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை நஸ்ரியா அதன் பின்னர் அட்லியின் முதல் படமான 'ராஜா ராணி', தனுஷ் நடித்த 'நய்யாண்டி', 'திருமணம் என்னும் நிக்காஹ்' போன்ற படங்களில் நடித்தார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்து கொண்டு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தபோது திடீரென பிரபல நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்.

திருமணத்திற்கு பின்னர் நஸ்ரியா மீண்டும் நடிக்க மாட்டார் என அவரது வட்டாரங்கள் கூறிவந்த நிலையில் தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நஸ்ரியா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அவரது கணவர் பகத்பாசில்தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா கஃபே, உஸ்தாத் ஹோட்டல், பெங்களூரு டேய்ஸ், பிரேமம் போன்ற பல படங்களை தயாரித்த பிரபல மலையாள தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அன்வர் ரஷீத் இந்த படத்தை இயக்கவுள்ளார்.

நிஜ வாழ்க்கையில் ஒன்றிணைந்த பகத்பாசில்-நஸ்ரியா ஜோடி திரையுலும் ஜோடியாக நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நஸ்ரியாவின் ரீ எண்ட்ரி அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.