close
Choose your channels

சென்னையில் இந்தியாவின் முதல் நடமாடும் டீக்கடை: பிரபல நடிகர் திறந்த வைத்தார்

Saturday, February 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை கோடம்பாக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் நாசர் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்.

இந்தியாவில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே நடத்தும் நடமாடும் டீக்கடையின் திறப்பு விழா சென்னையில் கோடம்பாகத்தில் நடைபெற்றது. ஆட்டோ ரிக்க்ஷாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் டீக்கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் நடிகர் நாசர், நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நடமாடும் டீக்கடை ஆட்டோவை பெண்களாகவே ஓட்டி சென்று ஒவ்வொரு பகுதிக்கும் டீ வழங்க இருக்கிறார்கள். இந்த நடமாடும் டீக்கடைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடமாடும் டீக்கடையை திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர், ’இன்று முதல் சென்னைவாசிகளுக்கு புதிய ருசியோடு கில்லி சாய் வழங்கப் போகிறது. பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று நினைக்கும் நடுத்தர வர்க்கப் பெண்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்’ என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.