close
Choose your channels

போதைப்பொருள் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளரின் மனைவி கைது: பெரும் பரபரப்பு 

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பதும் இதே வழக்கில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் தீபிகா படுகோன் உள்பட ஒரு சில முன்னணி நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமின்றி கன்னட மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த இன்னும் ஒரு சிலர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரோஸ் நதியத்வாலா என்பவரின் மனைவி ஷபானா சயீத் என்பவர் திடீரென போதைபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று போலீசார் ஷபானா சயீத் வீட்டில் சோதனை செய்தபோது 10 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னணி தயாரிப்பாளர்கள் ஒருவரின் மனைவி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.