பிரபல தயாரிப்பாளர் வீட்டில் போதைப்பொருள் சோதனை… மீண்டும் பரபரப்பு!

  • IndiaGlitz, [Saturday,October 09 2021]

பல இந்தி சினிமாக்களை உருவாக்கிய பிரபல தயாரிப்பாளர் இம்தியாஸ் ஹைத்ரியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் சோதனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலை NCB அதிகாரிகள் நடத்திய சோதனை செய்துள்ளனர். அதில் போதைப்பொருள் விருந்து நடைபெற்றதாகக் கூறி பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன், ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலங்களிலும் NCB அதிகாரிகள் தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

மும்பை பாந்திரா பகுதியில் உள்ள தயாரிப்பாளர் இம்தியாஸ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தொடர்ந்து அவருடைய அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கொலை வழக்கிற்குப் பிறகு போதைப்பொருள் விவகாரம் இந்தியா முழுக்கவே பூதாகரமாகி இருக்கிறது.

இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் ஒரு தயாரிப்பாளர் வீட்டில் தற்போது சோதனை நடைபெறுவது குறித்து விஷயம் பூதாகரமாகுமோ? என்ற கேள்விளையை எழுப்பி இருக்கிறது.

More News

பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக துப்பாக்கி சூடு: கமல் அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று 6வது நாள் கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் வழக்கத்தைவிட விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சொந்தக்குரலில் டப்பிங் பேசும் த்ரிஷா: எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான த்ரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசியதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

பீட்சா சாப்பிட பெண்களுக்குத் தடை… காரணத்தைக் கேட்டு ஆடிப்போன மக்கள்!

மத்திய கிழக்கு நாடான ஈரான் இஸ்லாமியக் குடியரசில் ஒளிப்பரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஷாலின் அடுத்த படம்: விரைவில் அப்டேட்டுக்கள்!

விஷால் நடித்து வரும் 31வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து புரமோஷன் பணிகள் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

என் வருங்கால கணவர் இந்த விஷயத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்: ராஷிகண்ணா

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷி கண்ணா தனது வருங்கால கணவருக்கு ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.