மீண்டும் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மட்டும் இவ்வளவா?

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று மட்டும் தமிழகத்தில் 3986 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4000ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 911,110 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 3986 பேர்களில் 1459 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 1500ஐ நெருங்கியுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 17 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12,821 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று 1,824 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 870,546 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 79,927 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 198,45,778 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தலைமைச் செயலாளர் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் டிஜிபி கலந்து கொண்டிருப்பதாகவும் நாளை புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 

More News

கருப்பு சிவப்பு சைக்கிளில் ஏன் வந்தார் விஜய்? இதுதான் காரணம்!

தமிழகத்தில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்களிக்க வந்த தளபதி விஜய் சைக்கிளில் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே

ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் நடிகை ராதிகாவுக்கு ஏற்பட்ட திடீர் சோதனை!

காசோலை மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகிய இருவருக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறப்பு ஜெயில் தண்டனை விதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் நாயகியாகும் 'குக் விக் கோமாளி' பிரபலம்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான 'பிகில்' திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தின் அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது.

செக் மோசடி....சரத், ராதிகா-வுக்கு ஓராண்டு சிறை தண்டனை....!

நடிகர்கள் ராதிகா,சரத் குமார் தம்பதிக்கு, செக் மோசடி காரணமாக ஓராண்டு சிறை தண்டனை விதிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சர்ச்சை பேச்சு...உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்...!

உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர்களின் இறப்பு குறித்து பேசுவது கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.