ஒரே நாளில் சுமார் 8000 பேர்: இந்தியாவில் 1.73 லட்சமாக உயர்ந்து கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வரை தினமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் பேர்கள் வரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 8000 பேர் வரை கொரோனாவினால் பாதிப்பு அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை சற்றுமுன் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனா தொற்று 1.73 லட்சமாக அதிகரித்துள்ளது. அதாவது இந்தியாவில் 1,73,763 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு நேற்று 1,65,799 என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் 7964 பேர்கள் கொரோனாவுக்கு பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706லிருந்து 4,971 ஆக அதிகரித்துள்ளதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 71,106 லிருந்து 82,370 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

உலக அளவில் 60,33,754 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 366,890 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனாவால் 1,793,530 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேசிலில் கொரோனாவால் 468,338 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் கொரோனாவால் 387,623 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் கொரோனாவால் 285,644 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் 271,222 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவால் 232,248 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் கொரோனாவால் 186,835 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் போது வேகமாக இறக்கின்றனர்!!! இதற்கு என்ன காரணம்???

பொதுவாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபரைவிட விட மருத்துவர்கள், செவிலியர்கள்,

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் 10 வயதுக்கும் கீழான குழந்தைகள்!!! பாகிஸ்தானில் புது நெருக்கடி!!!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 10 வயதுக்கும் குறைவான 930 குழந்தைகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது

பிளாஷ் பேக்: 1962 இல் இந்தியா, சீனா எல்லைப்போர்!!! நடந்தது என்ன???

சில நாட்களாக இந்திய எல்லைப் பகுதிகளில் கடும் பதட்டம் நிலவி வருவதை நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டு வருகிறோம்

'மசாலா சினிமாவின் மேஜிக்மேன்' அட்லி: பிரபல இயக்குனர் பாராட்டு

கோலிவுட் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து அதன் பின்னர் 'ராஜா ராணி' என்ற திரைபடத்தின் மூலம் இயக்குனரானவர் இயக்குனர் அட்லி

'கிளைமாக்ஸ்' படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு? ராம்கோபால் வர்மா அறிவிப்பு

அமெரிக்க நடிகை மியா மல்கோவா நடிப்பில் இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கிய 'கிளைமாக்ஸ்' திரைப்படம் ஜூன் 30-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே ராம்கோபால் வர்மா அறிவித்திருந்தார்.