தமிழக அரசின் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதாவின் சகோதரர்கள்

  • IndiaGlitz, [Monday,September 04 2017]

தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் குழப்பங்களால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை. கடைசி வரை நீட் தேர்வு இந்த ஆண்டு இருக்காது என்று நம்பிக்கை அளித்த மத்திய, மாநில அரசுகள் கடைசி நேரத்தில் கைவிட்டன. நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியும் 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவுக்கு நீதி கிடைக்கவில்லை. கடைசி நம்பிக்கையாக இருந்த சுப்ரீம் கோர்ட்டும் கைவிட்டதால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்ட்டார்.

இந்த நிலையில் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவியும், அவருடைய குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து ரூ.7 லட்ச காசோலையை கொடுப்பதற்காக அனிதாவின் வீட்டிற்கு நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா அவர்கள் சென்றார்.

ஆனால் அனிதா சகோதரர்கள் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை, காசோலையை வாங்க மாட்டோம், என ஆட்சியரிடம் அனிதா குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டடதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். அனிதாவின் குடும்பத்தினர் வறுமையில் இருந்தும் ரூ.7 லட்சத்தை துச்சமாக மதித்து அனிதா போன்று இன்னொரு உயிரிழப்பு இழக்கக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பது உயிரிழந்த அனிதாவுக்கு செய்யும் உண்மையாக அஞ்சலியாக கருதப்படுகிறது.

More News

'மெர்சல்' அமெரிக்கா ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் உலகின் சிறந்த மேஜிக்மேனாக வாய்ப்பு: பயிற்சியாளர் பெருமிதம்

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் மேஜிக்மேன் கேரக்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் அவருக்கு மேஜிக் பயிற்சி கொடுத்த பல்கேரியாவை சேர்ந்த டேனி பெலெவ் (Dani Belev) சமீபத்தில் இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்...

எடிட்டராக மாறிய பிரபல நடிகர்-இசையமைப்பாளர்

கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் இயக்குனர் ஆவது, இயக்குனர் நடிகர் ஆவதும், நடிகர் இசையமைப்பாளர் ஆவதும், இசையமைப்பாளர் நடிகர் ஆவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகள்...

அனிதாவின் மரணம் அர்த்தமுள்ளதாக மாற வேண்டும் : இயக்குனர் சுசீந்திரன்

டாக்டர் கனவு, நீட் தேர்வு காரணமாக கனவாகவே போனதால் இன்று காற்றில் கலந்துவிட்டது அனிதாவின் ஆத்மா...

அனிருத் இசையை கேட்டு பிரமித்த பிரமாண்ட இயக்குனர்

இளம் இசைப்புயல் அனிருத்துக்கு இந்த ஆண்டு பிரம்மாதமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும்...