நயன்தாராவின் திருநாளில் இணையும் கோபிநாத்

  • IndiaGlitz, [Tuesday,November 17 2015]

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை நடத்தி வரும் கோபிநாத், திரையுலகிற்கு புதியவர் இல்லை. ஜெயம் ரவி நடித்த 'நிமிர்ந்து நில்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜீவா-நயன்தாரா நடித்து வரும் 'திருநாள்' படத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக கோபிநாத் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கிராமத்து கதையம்சம் கொண்ட 'திருநாள்' படத்தில் கோபிநாத் அவர்கள் புகழேந்தி என்ற கேரக்டரில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும், அவருடைய கேரக்டர் நயன்தாரா கேரக்டருக்கு உதவி செய்யும் கேரக்டராக படத்தில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சமீபத்தில் பிரபல பாடகர் விஜய்ஜேசுதாஸ் 'மாரி' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதேபோல் கவுதம் மேனனின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் பிரபல பாலிவுட் பாடகர் பாபா ஷீகல் என்பவரும் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பாடகர்கள் போலீஸ் வேடங்களில் நடித்து வரும் நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளரான கோபிநாத்தும் போலீஸ் கேரக்டரில் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸுக்கு தயாராகிவிட்டபோதிலும் ...

முதலமைச்சர்-நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நடிகர்சங்கத்தின் நிர்வாகிகள் இன்று சந்தித்து வெள்ள நிவாரண நிதியளிக்க உள்ளதாக காலையில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். ..

'விஜய் 59' படத்தின் புதிய டைட்டில்?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

விஜய்யுடன் கார்த்திக் சுப்புராஜின் திடீர் சந்திப்பு ஏன்?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

அஜித் பிறந்த நாளில் விஜய் தரும் விருந்து

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு கொட்டும் மழையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது....