close
Choose your channels

கந்துவட்டி கொடுமையால் தீக்குளிப்பு: மூவர் பலி, ஒருவர் உயிர் ஊசல்

Monday, October 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தீக்குளித்த 4 பேர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னொருவர் உயிர் ஊசலாடி வருவதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

கந்துவட்டி கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதியினர் மற்றும் அவர்களின் மகள் மதிசாருண்யா, அக்சரபரணி ஆகியோர் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்தனர்.

பலத்த தீக்காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முதலில் தாய் சுப்புலட்சுமியும் அவரை அடுத்து இரண்டு மகள்களும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இசக்கிமுத்துவின் உயிரும் ஊஞ்சலாடுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கந்துவட்டி கொடுமை செய்த நபரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.