close
Choose your channels

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' சென்சார் தகவல்

Wednesday, July 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், மஹேஷ் மஞ்சுரேக்கர், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவில் கோகுல் சந்திரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.