close
Choose your channels

'நேர் கொண்ட பார்வை' ரிலீஸ் தேதியில் மாற்றமா?

Sunday, June 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது

பொதுவாக தமிழ்ப்படங்கள் வெள்ளியன்று ரிலீஸ் ஆவதுதான் வழக்கம். ஒருசில மாஸ் நடிகர்களின் படங்கள் வியாழன் அன்று ரிலீஸ் ஆவதும் உண்டு. ஆனால் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சனிக்கிழமை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களும் விநியோகிஸ்தர்களும் சற்றே குழப்பம் அடைந்தனர். இடையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் என்றாலும் திங்கள், செவ்வாய் என இரண்டு வேலை நாட்கள் இருப்பதால் இது சரியான ரிலீஸ் தேதிதானா? என்ற குழப்பம் பலரிடம் இருந்தது

இந்த நிலையில் 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் பத்து நாட்கள் முன்னதாகவே அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய படகுழுவினர் திட்டமிட்டு வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரபாஸின் 'சாஹோ' திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.