close
Choose your channels

போற போக்குல எடுக்கும் பட அல்ல அந்த படம்: நெட்டிசன் கேள்விக்கு சேரன் பதில்!

Saturday, May 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1997ஆம் ஆண்டு ’பாரதி கண்ணம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதன் பின்னர் இவர் ’ஆட்டோகிராஃப்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார் என்பதும், ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு சேரன் இயக்கிய ’திருமணம்’ என்ற திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் பிறகு இவர் விஜய்சேதுபதி படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சேரனிடம் நெட்டிசன் ஒருவர் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை இயக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய இயக்குநர் சேரன் ‘தயாரிப்பாளர்? என்ற கேள்வியை எழுப்பிய் நிலையில் ’இந்த படத்தை தயாரிக்க ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேளுங்கள், அவர் தயாரிப்பார்’ என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

இதற்கு சேரன் கூறியதாவது: பேசுவோம் பிறிதொரு சந்தர்ப்பத்தில்.. அது பெரும் வேலை.. சிறப்பாக செய்ய அதிகம் மெனக்கெட வேண்டும்... போற போக்குல எடுக்கும் படம் அல்ல’என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.