close
Choose your channels

ப்ரியா ஆனந்த் பதிவு செய்த சூரியோதய புகைப்படம்: நெட்டிசன்கள் கேட்ட ஏடாகூடமான கேள்விகள்!

Wednesday, March 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெய் நடித்த வாமனன் என்ற திரைப்படத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன்பின்னர் ’வணக்கம் சென்னை’ ’இரும்புக்குதிரை’ ’முத்துராமலிங்கம்’ ’எல்கேஜி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது அவர் ’சுமோ’ ’ஜேம்ஸ்’ ’ஆர்டிஎக்ஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா ஆனந்த் அவ்வப்போது கவர்ச்சி மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு சூரியோதயத்தை கேமிராவில் பதிவு செய்து, அந்த சூரிய உதயத்தை தான் ரசித்து பார்ப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர், ‘ஒவ்வொரு சூரிய உதயமும் உங்கள் வழியைக் கண்டறிய உங்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை அளிக்கிறது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் ஒரு சிலர் ஏடாகூடமான கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த புகைப்படத்தில் ப்ரியா ஆனந்த் உடை அணிந்து இருக்கிறாரா? இல்லையா? என்று சந்தேகம் வந்திருப்பதாகவும் அதை அவரே கொஞ்சம் தெளிவு செய்தால் நன்றாக இருக்கும் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதிகாலை நேரத்தில் எடுக்கப்பட்ட நிழல்படம் போல் காணப்படும் இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ஏடாகூடமான கேள்விகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.