close
Choose your channels

இப்ப சொல்றதை விஜய்க்கு நடந்தபோதும் சொல்லியிருக்கலாமே: மாஸ்டர் நாயகிக்கு நெட்டிசன்கள் கேள்வி!

Thursday, March 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்திய அரசுக்கு எதிராக இப்போது கருத்து கூறும் நடிகை மாளவிகா மோகனன் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடந்த போதும் சொல்லி இருக்கலாமே என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் மற்றும் நடிகை டாப்சி ஆகிய இருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்றி அதிரடி சோதனை நடத்தினர். இந்த நிலையில் இருவருமே விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் தான் வருமான வரி ரெய்டு நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ நாயகி மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் வீடுகளில் நடந்த ரெய்டு குறித்த புகைப்படத்தை பதிவு செய்து ‘நாம் பாசிசத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்’என கருத்து கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்த நெட்டிசன்கள் ’தளபதி விஜய் வீட்டில் ரெய்டு நடந்த போது இதே போன்று ஒரு பதிவு கொடுத்திருக்கலாமே, அப்போது அமைதியாக இருந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் மாளவிகா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.