40 லட்ச ரூபாய் கேட்ட ஆர்த்தி.. ஒரு பைசா கூட வேண்டாம் என கூறிய சமந்தா.. நெட்டிசன்கள் ஒப்பீடு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ரவி மோகனை திருமணம் செய்த ஆர்த்தி ரவி, தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தனது கணவர் நாக சைதன்யாவை பிரியும் போது "தனக்கு ஒரு பைசா கூட ஜீவனாம்சம் தேவையில்லை" என நடிகை சமந்தா கூறியது, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் ஒப்பீடு செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்த்தி ரவி தனது மனுவில் மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் தேவையென தெரிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விசாரணை முடிந்த சில நிமிடங்களில், ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், போன் பேசும் போல் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் "News incoming" என்று குறிப்பிட்டுள்ளார். இது ஆர்த்தி ரவியை திட்டமிட்டவாறு கேலி செய்கிறார் போல் உள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சிலர் "News incoming"ஆ அல்லது "New income-ing"ஆ என்றும் கூறி, கெனிஷா குறித்து ரவி மோகனையே கேலி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள், சமந்தா மற்றும் ஆர்த்தி ரவியை ஒப்பிட்டு கூறியபோது, ‘“நடிகை சமந்தா, தனது கணவரை பிரியும் போது ஒரு பைசா கூட ஜீவனாம்சம் வேண்டாம் என்று சொன்னார். நாகார்ஜுனா ‘பிளாங்க் செக்கை கொடுக்க தயார், எத்தனை கோடி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்’ என்ற போதும், அவர் அதை வாங்க மறுத்தார். அதுதான் உண்மையான நற்பண்பு. கணவன்-மனைவி பிரிவில் பணம் முக்கிய பங்கு வகிக்க கூடாது. ஆனால் ஆர்த்தி ரவி மாதம் 40 லட்சம் கேட்பது, பணம் தான் முக்கியம் என அவரின் மனநிலையை காட்டுகிறது,” என்று தெரிவித்து வருகின்றனர்.
எனவே, இந்த ஒப்பீடு குறித்து நீங்கள் இந்த விவகாரத்தில் என்ன நினைக்கிறீர்கள்? என்பதை கீழே கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை பகிருங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments