close
Choose your channels

'நெற்றிக்கண்' இயக்குனரின் அடுத்த படத்தில் 'பாகுபலி' நடிகர்!

Saturday, October 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நெற்றிக்கண்’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மிலந்த் ராவ் இயக்கும் அடுத்த படத்தில் ‘பாகுபலி’ படத்தில் நடித்த நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நயன்தாரா, அஜ்மல் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ’நெற்றிக்கண்’ என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய இயக்குனர் மிலந்த் ராவ் இயக்கும் அடுத்த படத்தில் ‘பாகுபலி’ படத்தில் நடித்த ராணா டகுபதி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பான் - இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் இந்த படத்தை அடுத்த ஆண்டு இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

ரானா டகுபதியுடன் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.