close
Choose your channels

வெறுமனே 90 நிமிடத்தில் துல்லியமான கொரோனா ரிசல்ட்… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

Saturday, September 19, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இதுவரை கொரோனா பரிசோதனைக்கு RTPCR சோதனை கருவியை மட்டுமே உலக நாடுகள் நம்பியிருக்கின்றன. மற்ற புதுபுது கண்டுபிடிக்கள் அறிமுகப் படுத்தப்பட்டாலும் அவை துல்லியமாக கொரோனா முடிவினை தரவில்லை என்றும் கூறப்படுகிறது. இக்குறையைப் போக்குவதற்கு இங்கிலாந்து விஞ்ஞானிகள் புது கருவி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவி மூலம் வெறுமனே 90 நிமிடங்களில் கொரோனா பரிசோதனையை செய்து முடிவினைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் உள்ள லண்டன் இம்பீரியல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள், டிஎன்ஏநட்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் 90 நிமிடங்களில் கொரோனா முடிவை அறிந்து கொள்ளும் புது கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கருவி ஒரு சிறிய பெட்டிப் போன்று காணப்படும் என்றும் கூறப்படுகிறது. நீலநிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவி லேப் இன் கார்ட்ரிஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த சிறிய பெட்டிக்குள் கொரோனா மாதிரியை வைக்கும்போது கொரோனா மரபணு, மாதிரியில் இருக்கிறதா எனத் துல்லியமாக இந்தக் கருவி காட்டிக்கொடுத்து விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்தில் உள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் மீது இக்கருவிகளைக் கொண்டு சோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும் தகவல் கிடைக்கிறது. அச்சோதனை முடிவுகள் வெற்றிகரமாக அமைந்ததால் தற்போது இங்கிலாந்து சுகாதார நிறுவனம் அங்குள்ள 8 மருத்துவமனைகளில் இக்கருவியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இதிலுள்ள மற்றொரு குறைபாடு இக்கருவியைக் கொண்டு ஒரு நேரத்தில் ஒரே ஒரு கொரோனா மாதிரியை மட்டுமே சோதனைக்கு எடுத்துக் கொள்ள முடியும். எனவே ஒரு கருவியைக் கொண்டு ஒருநாளைக்கு 16 கொரோனா மாதிரிகளை மட்டுமே சோதனை செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆர்டிபிசிஆர் போன்று பல மணி நேரங்கள் கொரோனா முடிவுக்காக காத்திருக்காமல் வெறுமனே 90 நிமிடங்களில் முடிவைத் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் தற்போது இக்கருவிக்கு பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். தற்போது இங்கிலாந்து நிறுவனம் 58 லட்சம் புதிய கருவிக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.