"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்" !!! கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி!!!

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பல்வேறு உக்திகளைக் கையாண்டு வருகிறது. வீட்டுச்சுவர்களில் நோட்டீஸ் ஒட்டுதல், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்தல், இலவச தொலைத்தொடர்பு வசதி எனக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கொரோனா அறிகுறி இருப்பவர்கள், எளிமையாக சுகாதாரத் துறையை அணுகும் வகையில் ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த, கொரோனா பாதுகாப்பு செயலியை ஆப்பிள் தவிர மற்ற அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எளிமையாப் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. டெல்லி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து அதிகம் பேர் கலந்துகொண்ட நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. பலரது தகவல்களை இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலைமையும் தொடருகிறது. இதுபோன்ற தருணங்களில் இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

சளி, காய்ச்சல், சுவாசக்கோளாறு போன்ற கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகள் இருப்பவர்கள் தங்களை ஒரு செல்பி எடுத்து அனுப்பினாலே போதுமானது. செல்பி அனுப்பப்பட்டவுடன் அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக, அவரது இருப்பிடத்தை சுகாதாரத்துறை பணியாளர்கள் சென்று அடைவார்கள். நோளிகளை எளிமையாக கண்டுபிடிப்பதற்கு இந்த புதிய செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டு இருக்கிறது.
 

More News

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து

கடந்த மார்ச் 13 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1130 பேர் கலந்து கொண்டதாகவும்,

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அரசு மருத்துவர்: சிகிச்சை பெற்ற அனைவரையும் வளைக்க முடிவு

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்றும், அவ்வாறு கலந்து கொண்டு தமிழகத்திற்கு மீண்டும் திரும்பியவர்களில்

ஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சினேகா உல்லல் ஆன்லைன் மூலம் ஏமாந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு பாடமாக உள்ளது.

மனிதர்களின் தொல்லையே இல்லை!!! கடலில் இருந்து வெளியே வந்த 8 லட்சம் ஆமைகள்!!!

கொரோனா நோய்த்தொற்று பரவியதில் இருந்து பெரும்பலான நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

தூய்மை பணியாளர்களுக்கு மலர்தூவி மாலை அணிவித்த பொதுமக்கள்: நெகிழ்ச்சி வீடியோ

நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும், காவல்துறையினரும் இரவு