close
Choose your channels

சிறுமியை கொலை செய்து புதைத்ததா திருநாவுக்கரசு கும்பல்? அதிர்ச்சி தகவல்

Tuesday, March 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொள்ளாச்சி விவகாரத்தில் திருநாவுக்கரசு உள்பட நான்கு பேர் கைது செய்யபப்ட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை இந்த கும்பல் பலநூறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக மட்டுமே தகவல்கள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த ஒரு ஆடியோவின் படி ஒரு சிறுமியை இந்த கும்பல் கொலை செய்து புதைத்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஆடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவில் 'தானும் பொள்ளாச்சி சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் என்றும், தன்னுடன் ஐந்தாறு பெண்கள் இருந்ததாகவும், அவர்களில் ஒரு சிறுமியை அந்த கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததால் அந்த சிறுமி இறந்துவிட்டதாகவும், அந்த சிறுமியின் உடலை அந்த பங்களாவின் பின்னால் அந்த கும்பல் புதைத்துவிட்டு வெளியே சொல்லக்கூடாது என்று தங்கலை மிரட்டியதாகவும் அந்த ஆடியோவில் கூறப்பட்டுள்ளது

தான் சொல்வது உண்மை என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவும் என்றும் அந்த ஆடியோவில் பேசிய பெண் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்போம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.