close
Choose your channels

பிரசவத்தின்போது தலை துண்டான குழந்தை! சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்

Wednesday, March 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அருகே உள்ள கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண்ணின் பிரசவத்தின் போது குழந்தையின் தலை துண்டானதால் மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்றிரவு பொம்மி என்ற கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இரவு நேரத்தில் திடீரென அவருக்கு பிரசவ வலி வந்தது. அப்போது மருத்துவர் இல்லாததால் அங்கு பணிபுரியும் நர்ஸ்கள் பிரசவம் பார்க்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் குழந்தை வெளியே வரத்தொடங்கியதும் அனுபவம் இல்லாத நர்ஸ் ஒருவர் குழந்தையின் தலையை பிடித்து இழுத்தபோது தலை துண்டாகி அவர் கையோடு வந்தது. மேலும் குழந்தையின் உடல் பகுதி மட்டும் தாயின் உள்ளே மாட்டிக்கொண்டது.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த நர்ஸ்கள், பொம்மியை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் பொம்மியின் உள்ளே இருந்த குழந்தையின் உடலை பெரும் போராட்டத்திற்கு பின் வெளியே எடுத்தனர். தற்போது பொம்மிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுபவம் இல்லாத நர்ஸ் பார்த்த பிரசவத்தால் ஒரு குழந்தையின் உயிர் பறிபோனது அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.