தம்பதியின் தவறான முடிவு....! பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை....!

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

பெற்றோர்கள் கட்டைப்பையில் வைத்து குழந்தையை எடுத்துச் சென்றதில், மூச்சுத்திணறல் காரணமாக பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்முகம் என்பவர் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இருந்து, திருப்பூருக்கு குடிபெயர்ந்துள்ளார். தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர், உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவரை சென்ற 2016-இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண்குழந்தை உட்பட, ஒரு ஆண்குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான தனலட்சுமிக்கு கடந்த 12-ஆம் தேதி, பல்லடம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த பெண் குழந்தைக்கு ரத்தம் குறைவாக உள்ள காரணத்தால், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்குப்பின் அங்கிருந்து அவசர அவசரமாக, துணிகள் நிரம்பிய கட்டைப்பையுடன் வீட்டிக்கு வந்துள்ளனர் சண்முகமும், தனலட்சுமியும். கட்டைப்பையில் துணிகளுக்கு இடையில் குழந்தையை வைத்து எடுத்து வந்ததில், பச்சிளம் பிஞ்சு பரிதமாக உயிரிழந்துள்ளது. இதையடுத்து காளிவேலம்பட்டி பிரிவு அருகே குழியைத்தோண்டி யாருக்கும் தெரியாமல், குழந்தையை புதைத்து விட்டனர்.

இதற்கிடையே தனலட்சுமி இல்லாததை பார்த்த மருத்துவர்கள், பல்லடம் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மூலம் அவர் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது தனலட்சுமி மருத்துவமனை பிடிக்காததால் தாங்கள் அங்கிருந்து கிளம்பியதாகவும், மேலும் நடந்த சம்பவங்களை செவிலியரிடம் கூறியுள்ளார். இதன்பின்பு சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ் அவர்களின் தலைமையிலான, மருத்துவக்குழு குழந்தையை தோண்டி எடுத்து, பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண் சிசு கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை குழந்தைக்கு இருந்ததா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து, பல்லடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

More News

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு....!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்பது 7 ஆயிரத்திற்கு குறைந்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளது.

பிதாமகனை மிஞ்சிய சேவை… இடுகாட்டில் கெத்துக்காட்டும் மூதாட்டி!

பொதுவா ஊர் கிராமங்களில் உள்ள இடுகாடுகளில் வெட்டியான் இருப்பதைப் பார்த்து இருப்போம்.

உலகிலேயே சொந்தமாக ரயில் வைத்து இருந்த சொகுசு தமிழர்… சிறப்பான வரலாற்றுப் பக்கங்கள்!

தனி விமானம் பயன்படுத்தும் இந்தக் காலத்தில்கூட யாரும் ஒரு ரயிலைச் சொந்தமாக வைத்து இருப்பதில்லை

நிர்வாண வீடியோக்கள் நிறைந்த செல்போன்....! மணிகண்டனின் தில்லாலங்கடி வேலைகள்....!

கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின், செல்போனில் ஏராளமான நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷை அடுத்து டான்ஸ் மூலம் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த 'பிகில்' நடிகை!

தளபதி விஜய் நேற்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடியதை அடுத்து அவருடன் நடித்த நடிகர்-நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை