25 ஆக அதிகரித்த புதியவகை கொரோனா பாதிப்பு… தடுப்பூசி குறித்து எழுந்த சந்தேகம்?

 

இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டு வரும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்து இருந்தார். இதை உறுதிப்படுத்தும் விமதாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என்று பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து உருமாறி தற்போது உலகில் பீதியை கிளப்பி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் 25 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

நேற்றுவரை 20 ஆக இருந்த புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு இன்று புதிதாக டெல்லியில் ஒருவருக்கு மற்றும் பூனேவில் 4 பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திலும் ஒருவருக்கு புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று தமிழகச் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி இருந்தார். அந்த எண்ணிக்கை இந்தியா முழுவதும் தற்போது 25 ஆக அதிகரித்து இருக்கிறது.

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரேனா வைரஸின் மரபணு உருமாறி விட்டதாகவும் இதனால் ஏற்படும் பாதிப்பு மற்ற வகைகளைவிட 70% அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. VuI-202012/01 எனும் பெயரிடப்பட்டு உள்ள இந்தப் பாதிப்பினால் தற்போது பல உலக நாடுகளில் மீண்டும் இரண்டாம் அலை வீசலாம் என்ற அச்சமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸின் நோய் எதிர்ப்பு அழுத்தம் காரணமாக இந்த வேறுபாடுகள் ஏற்படுகின்றன என்றும் இந்த நோய் எதிர்ப்பு அழுத்தம் சுற்றுச்சூழல், ஹோஸ்ட் சிகிச்சை அல்லது பிற முறைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்தப் புதியவகை கொரோனா வைரஸினால் தற்போது உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் கொரோனா தடுப்பூசி செயல்திறனில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றே விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

More News

தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு-நயன்தாரா?

சிம்பு மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் இணைந்து ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு, நயன்தாரா இணைந்து நடிக்க வாய்ப்பு

நூதன முறையில் நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டிய ஆசாமி… ஒரு புகாரால் முடிவுக்கு வந்த சர்ச்சை!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

2020 இல் நான் கற்றுக் கொணடவை… மனம் திறக்கும் முன்னணி நடிகை!!!

தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலாபால். இவர் முன்னதாக இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார்.

மாஸ்டருக்கும் ஈஸ்வரனுக்கும் வரவேற்பு கொடுங்க மக்களே: பிரபல தயாரிப்பாளர் வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டும் போதிய பார்வையாளர்கள் வரவில்லை

ஆரியிடம் மனைவி கூறியது என்ன?

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கும் நிலையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் ஆரியின் மனைவி மற்றும் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.