எல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது ஓடிடி மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களுக்கு என பல வெப்சீரிஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

வெப்சீரிஸ்களுக்கு சென்சார் தேவையில்லை என்பதால் அப்பட்டமான ஆபாச காட்சிகளும் அதில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக சமீபகாலமாக இந்தி மொழியில் வெளியாகும் வெப்சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகள் சர்வசாதாரணமாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கணவர்களால் திருப்தி அடையாத பெண்கள் கள்ளக் காதலர்களுடன் உறவு கொள்வதும், தோழியின் கணவருடன் நெருக்கம் காட்டுவதும், கணவரின் நண்பரிடம் நெருக்கம் காட்டும் பெண்களும், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ரகசியமாக உறவு கொள்ளும் பெண்கள் ஆகியோர்கள் தான் வெப்சீரிஸ்களில் முக்கிய கேரக்டர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை வெப்சீரிஸ்களை இளைஞர்கள் தேடிப்பிடித்து பார்த்து வருவதால் இதற்கான பார்வையாளர்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வெப்சீரிஸ் உள்ள காட்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவனால் திருப்தி அடையாத பெண் ஒருவர் தனது கள்ளக் காதலனை வீட்டுக்கு வரவழைத்து படுக்கை அறையில் உறவு கொள்ளுதல் போன்ற காட்சிகள் அந்த வெப்சீரிஸில் உள்ளது. இருவரும் அப்பட்டமாக படுக்கை அறையில் உறவு கொள்ளும் காட்சிகள் நீலப்படங்களுக்கு இணையாக இருப்பதாகவும், ஆபாசத்தின் உச்சமாக இருக்கும் இது போன்ற காட்சியை அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லையென்றால் கலாச்சார சீர்கேடு ஆகிவிடும் என்றும் பலர் எச்சரிக்கின்றனர். இதனை அடுத்து விரைவில் வெப்சீரிஸ்களுக்கும் சென்சார் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

நான் ஒரு பெண் சிங்கம்: கர்ஜித்த வனிதா விஜயகுமார்

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா, சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பீட்டர் பால் முதல் மனைவி அளித்து

போதும்டா சாமி.. எதுக்கு பொண்ணா பொறக்கணும்னு தோனுது: பாடகி சின்மயி வேதனை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன 

ரஞ்சி டிராபியில் அதிக ரன்களை குவித்தேன்... ஆனால் என்னை ஒதுக்கிட்டாங்க... குற்றம் சாட்டிய முக்கிய வீரர்!!!

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து சாதனை படைத்த வாசிம் ஜாஃபர் தற்போது அதிர்ச்சி தரும் ஒரு தகவலை தெரிவித்து இருக்கிறார்

கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் யானைகள்: விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் புது சிக்கல்!!!

தென் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானஸ் இல் தற்போது ஒரு புது சிக்கல் வெடித்து இருக்கிறது

ரணகளத்திலும் குதூகலம் கேக்குது... 2.89 லட்சம் மதிப்பிலான கொரோனா மாஸ்க்!!! ஆச்சர்யப்பட்ட மக்கள்!!!

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் கடும் யுத்தத்தையே நடத்த வேண்டியிருக்கிறது