ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் மர்ம நோய்… விஞ்ஞானிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய அதிர்ச்சி!!!

  • IndiaGlitz, [Friday,October 30 2020]

 

அமெரிக்காவில் இதுவரை கவனத்தில் வராத புதிய வகை நோய்த் தாக்கம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் இது ஆண்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கும் தன்மைக் கொண்டது என்பதையும் தெரிவித்து உள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களில் குறைந்தது 40% பேர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்த கருத்துகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் (New England journal of Medicine) எனும் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 2500 க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அழற்சி (வீக்கம்) தொடர்புடைய பாதிப்புகள் இருந்ததாகவும் ஆனால இந்த பாதிப்புகளை மருத்துவர்களால் சரிசெய்ய முடியாத நிலைமை நீடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் ஆண்களை மட்டுமே தாக்கும் VEXAS எனும் புதிய நோயைக் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்தப் பாதிப்பினால் சில அபாயகரமான கோளாறுகள் ஏற்படுவதாகவும் அந்த விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர். நரம்புகளில் இரத்தம் உறைவு வீக்கம், தொடர்ச்சியான காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு மற்றும் மைலோயிட் செல்களில் வெற்றிடத்தை உருவாக்குவது போன்றவை இதில் முதன்மையான சிக்கலாக இருந்து வருகிறது. மேலும் இந்தவகை நோய்த்தாக்கம் மரபணு மாற்றங்களால் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் அமெரிக்காவில் 125 மில்லியன் மக்கள் ஒருவித தொடர்ச்சியான அழற்சி நோயுடன் வாழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் 2500 பேருக்கு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட (VEXAS) யின் அறிகுறிகள் இருப்பதாகவும் அந்நாட்டு தேசிய மனித மரபணு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது. தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்றவை இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் VEXAS எனும் புதிய அழற்சி நோய்க் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

More News

நீங்கள் எங்கள் விலைமதிப்பற்ற ரத்தினம்: ரஜினி குறித்து குஷ்பு டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வர மாட்டார் என்றும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்றும் இருவேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் மாறி மாறி பதிவு செய்யப்படுகிறது

7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்: 300 மாணவர்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்க வாய்ப்பு

நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்யும் மசோதா சமீபத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது

நீங்க எப்படி என்கிட்ட இப்படி சொல்லலாம்? வெடித்தது அர்ச்சனா-ஆரி மோதல்!

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா நுழைந்தது முதல் நாட்டாமைத்தனம் செய்து வருகிறார் என்பதும் அவரது டாமினேஷன் சில சமயங்களில் அத்துமீறி இருப்பதாக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும்

ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  

அண்ணா அறிவாலயத்தில் ஒட்டப்பட்ட ரஜினி ஆதரவு போஸ்டர்: சென்னையில் பரபரப்பு

கடந்த இரண்டு நாட்களாக ரஜினி வெளியிட்டதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த கடிதம் குறித்து நேற்று டுவிட்டரில் ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.