close
Choose your channels

திருமணமான 5வது நாளில் விபத்தில் பலியான புதுப்பெண்; பிணத்தை கட்டிபிடித்து கதறிய கணவன்!

Monday, September 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேலூர் மாவட்டத்தில் திருமணமான ஐந்தாவது நாளே விபத்தில் பலியான மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கணவன் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் மணிகண்டன் என்பவருக்கு திவ்யா என்ற பெண்ணுடன் கடந்த 1ஆம் தேதி திருமணம் நடந்தது. பலவித கனவுகளுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கிய இந்த தம்பதி நேற்று ஏலகிரி மலைப்பகுதிக்கு பைக்கில் சுற்றுலா சென்றனர். ஏலகிரியில் பல இடங்களை சுற்றிப்பார்த்த பின் மீண்டும் வேலூருக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு கொண்டை வளைவில் திடீரென கார் ஒன்று வந்ததால் காரின்மீது மோதாமல் இருக்க மணிகண்டன் பிரேக் போட்டார். ஆனால் பைக் அவரது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புதுமணப்பெண் திவ்யா, சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். படுகாயத்துடன் மீண்டு எழுந்த மணிகண்டன் மனைவியின் பிணத்தை பார்த்து, அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். அவர் அழுத காட்சி அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான ஐந்தே நாட்களில் புதுமணப்பெண் ஒருவர் விபத்தில் பலியான சோக சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos