ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்க 'மெர்சல்' படக்குழுவின் அதிரடி திட்டம்

  • IndiaGlitz, [Tuesday,October 10 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்திற்கு ஆயிரம் தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் தகர்த்து வரும் தீபாவளி அன்று படம் திரைக்கும் வரும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் உலக சாதனை செய்துள்ள நிலையில் இதேபோன்று இன்னொரு சாதனையை ஏற்படுத்த படக்குழுவினர் விரைவில் இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் விஜய் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால் 'மெர்சல்' திரைப்படம் ரிலீசாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் விஜய் ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் இந்த படத்தின் புரமோ வீடியோ மற்றும் அட்டகாசமாக போஸ்டர்கள் அவ்வப்போது வெளிவரும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே மெர்சல் படத்தின் திடீர் புரமோ வீடியோக்களை அவ்வப்போது இனி இணையதளத்தில் பார்க்கலாம்

More News

நாளை முதல் ரஜினியுடன் மீண்டும் இணையும் எமிஜாக்சன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு ஒரே ஒரு பாடலை தவிர அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில் அந்த ஒரு பாடலின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது.

ஒரே ஒரு பாடலுக்கு 5 நடன இயக்குனர்கள்: சக்கை போடு போட்ட சந்தானம்

கோலிவுட் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாகி வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'சக்க போடு போடு ராஜா'

ஜிகிர்தண்டா ரீமேக்: ரஜினி நடிக்க விரும்பிய கேரக்டரில் சஞ்சய்தத்

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, லட்சுமிமேனன் உள்பட பலர் நடித்த 'ஜிகிர்தண்டா' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியது.

வைகோ தயாரிப்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை 'வேலுநாச்சியார்' திரைப்படம்

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்ற பெரும்புகழை பெற்றவர் ராணி வேலுநாச்சியார்.

பிச்சைக்காரன் படத்தை போல் நடந்த நெஞ்சை நெகிழ செய்யும் உண்மைச்சம்பவம்

விஜய் ஆண்டனி நடித்த வெற்றி படமான 'பிச்சைக்காரன்' படத்தில் தனது அம்மா குணமாக வேண்டும் என்பதற்காக கோடீஸ்வரரான விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக ஒரு வேண்டுதலுக்காக நடிப்பார்.