பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரஜினியின் அரசியல் போஸ்டர்

  • IndiaGlitz, [Saturday,April 22 2017]

சமீபத்தில் பதவியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் தன்னலமற்ற, அதிரடியான நடவடிக்கைகளால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆரம்பத்தில் இவரது உடையை பார்த்து ஒரு மத அடையாளமுள்ள தலைவராக மக்கள் கருதினர். ஆனால் தற்போது அவரது நடவடிக்கை பிற மதத்தினர்களும் போற்றும் வகையில் உள்ளது. மேலும் தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநில மக்கள் இவர் போன்ற ஒரு முதல்வர் நம் மாநிலத்திற்கு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கும் வைக்கும் அளவுக்கு உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. மக்களின் நன்மதிப்பை இழந்தவர்கள் ஆட்சி செய்து கொண்டிருப்பதால் மக்கள், ஒரு உண்மையான, ஆளுமையுள்ள, நேர்மையான, யோகியை போன்ற தன்னலமில்லாத அதிரடி தலைவரை தேர்வு செய்ய விரும்புகின்றனர். இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் பலர் ஊழல் குற்றச்சாட்டுடன் இருப்பதால் ஒரு புதிய தலைவர் உருவாகும் நேரம் வந்துவிட்டதாகவே தமிழக சூழல் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் சென்னையின் ஒருசில இடங்களில் 'மக்கள் வாழ வேண்டும் என்றால் நீங்கள் ஆள வேண்டும்' என்ற வாசகங்களுடன் ரஜினியின் போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மன்றம் நகரத்தின் பல இடங்களில் ஒட்டியுள்ளதாக தெரிகிறது.

அரசியலுக்கு வருவதும் வராததும் ரஜினியின் முழு உரிமை. அவரை அரசியலுக்கும் வருமாறு கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதே நேரத்தில் தன்னால் தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும் என்று அவர் கருதினால் 1996க்கு பின்னர் இன்றைய சூழ்நிலை சரியானது என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. ரஜினி என்ன முடிவெடுப்பார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விவசாயிகளுக்காக நடைபெறும் ஏப்ரல் 25 போராட்டம்: நடிகர் சங்கம் முக்கிய முடிவு

சமீபத்தில் திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பாகுபலி 2-சத்யராஜ் பிரச்சனை: வாட்டாள் நாகராஜ் முக்கிய முடிவு

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தான் கூறிய கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாக நேற்று சத்யராஜ் அறிவித்ததை அடுத்து பாகுபலி-2 படத்திற்கு எதிரான கன்னட அமைப்பினர் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். இதனால் 'பாகுபலி 2' படத்திற்கு ஏற்பட்டிருந்த பெரிய பிரச்

பணத்துக்காக மட்டுமே கவலைப்படுபவர்கள் கமல்-சத்யராஜ். எச்.ராஜா

உலக நாயகன் கமல்ஹாசனை கடந்த சில நாட்களாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே. ..

'விருமாண்டி' வசனம் மூலம் சத்யராஜை பாராட்டிய கமல்ஹாசன்

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த காவிரி பிரச்சனை குறித்த கூட்டம் ஒன்றில் நடிகர் சத்யராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய அனுமதிப்போம் என்று கடந்த சில நாட்களாக கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன...

இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும். பாகுபலி-சத்யராஜ் விவகாரம் குறித்து அன்புமணி

'பாகுபலி' படத்தின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சத்யராஜ் வருத்தம் தெரிவித்த பின்னரும் கர்நாடகத்தில் ஒருசில கன்னட அமைப்புகள் சத்யராஜின் உருவபொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தி வருகிறது. இதனை கடுமையாக கண்டித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப