தாண்டவமாடும் கொரோனா...! மஹாராஷ்டிராவில் வரும் புதிய கட்டுப்பாடுகள்...!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன.

இந்தியாவிலே மஹாரஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஏற்கனவே பலவிதமான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. இவை வரும் மே-1 வரை கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

• புறநகர் ரயில் சேவைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலக் குறைபாட்டால் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அனுமதி தரப்படும்.

• அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை 50% இருந்து, 15%-மாக குறைக்கப்படும்.

• அத்தியாவசிய தேவைகளுக்காக செயல்படுபவை, செல்லப் பிராணிகள் கடை, தகவல் சேவை மையங்கள், கார்கோ அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை 50% பணியாளர்களுடன் மட்டுமே இயங்கப்படும். மேலும் வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள், வழக்கறிஞர்கள் அலுவலகங்கள் போன்றவற்றில் 5 நபர்கள் அல்லது 15% ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

• தனியார் மற்றும் அரசு போக்குவரத்து சேவைகள் 50% பயணிகளுடன் இயங்க, அனுமதி அளிக்கப்படும்.

• பிற நகரங்களுக்கு செல்பவர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு சென்றால் மட்டுமே அனுமதி தரப்படும். அவசர மருத்துவ சேவைகள் மற்றும் இறுதிச்சடங்கில் பங்குகொள்ள அனுமதி அளிக்கப்படும்.

• பிற மாநிலங்கள் மற்றும் நகரங்களில் இருந்து ரயில், தனியார் பேருந்துகளில் வருபவர்கள், 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு நகரத்திலும் 50% மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதியளிக்கப்படும்.இது போன்ற விதிகளை மீறும் நபர்கள் ரூ.10,000 அபராத தொகையை செலுத்த வேண்டும்.

• திருமண நிகழ்வுகளில் 25 பேர் கலந்து கொள்ளலாம், 2 மணி நேரம் மட்டுமே நடத்தப்பட வேண்டும். இந்த விதியை மீறுபவர்கள் ரூ.50,000 வரை அபராதத் தொகையை செலுத்த நேரிடும். மேற்கூறிய கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை பரிசோதிக்க, உள்ளாட்சி அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரு உடைக்கு இத்தனை லட்சமா? பாலிவுட் நடிகையின் தெறிக்கவிடும் பேஷன் பிக்!

தமிழில் தளபதி விஜய் நடித்த “தமிழன்” படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. உலக அழகிப் பட்டம் வென்ற இவர் இந்தி சினிமா, அடுத்து ஹாலிவுட் என்று ரவுண்டு கட்டி கலக்கி வருகிறார்.

குத்துச்சண்டை வீரருக்கு மீன்குழம்பு விருந்து அளித்த எம்.ஜி.ஆர்… எழுச்சி ஊட்டும் ஆடியோ!

குத்துச் சண்டை போட்டிகளில் மறக்க முடியாத ஒரு பெயர் முகமது அலி. அமெரிக்க குத்துச்சண்டை வீரரான முகமது அலி கலந்து கொண்ட போட்டிகளைப் பார்த்து இன்றைய தலைமுறை இளைஞர்களும் மிரண்டு போகின்றனர்.

அந்தக் கன்னக்குழி அழகில்… இளம் நடிகை பதிவிட்ட வைரல் போட்டோ ஷுட் புகைப்படம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் வலம் வரும் இளம் நடிகை சிருஷ்டி டாங்கே. இவருடைய கன்னக்குழி அழகிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

வெற்றிமாறன் - சூரி படத்தின் டைட்டில், பர்ஸ்ட்லுக் போஸ்டர்!

தனுஷ் நடித்த 'அசுரன்' படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்

சுந்தர் சியின் 'அரண்மனை 3': ஃபர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர் ரிலீஸ்

சுந்தர் சி நடித்த இயக்கி வரும் 'அரண்மனை 3' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று