close
Choose your channels

ஞாயிறு முதல் புதிய உத்தரவு: கடைகள் திறந்திருக்க கட்டுப்பாடு

Friday, March 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காய்கறிகள், மளிகை கடைகள், பால் மற்றும் மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் ஆகியவை நாள் முழுவதும் இயங்க அனுமதித்திக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வரும் ஞாயிறு முதல் புதிய உத்தரவு அமலுக்கு வருவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன்படி ஞாயிறு முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெட்ரோல் பங்குகளும் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மருந்தகங்கள் உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கும் என்றும் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.