close
Choose your channels

முகத்தில் உள்ள கருவளையம் போக வேண்டுமா… நல்லப் பாம்பை வைத்து தேய்க்கும் நூதன சிகிச்சை!!!

Thursday, November 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முகத்தில் உள்ள கருவளையம் போக வேண்டுமா… நல்லப் பாம்பை வைத்து தேய்க்கும் நூதன சிகிச்சை!!!

 

முகத்தில் உள்ள கருவளையத்தைப் போக்க வேண்டும் என்பதற்காக நம்ம ஊரு ஆண், பெண் என அனைவரும் பெயர் தெரியாத கிரீம்களை எல்லாம் அப்பிக் கொள்கிறோம். ஆனால் என்ன செய்தாலும் கருவளையம் மட்டும் மறைவதே இல்லை. இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி, பாம்பாட்டி ஒருவர் நூதன சிகிச்சையில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த சிகிச்சை முறையைக் கேள்விப்பட்ட சமூகநல ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் புதூர் எனும் பகுதியில் வசித்து வரும் குமரேசன் எனும் பாம்பாட்டி அந்த மாவட்த்தின் திருபுவனை பகுதிகளில் தற்போது முகாமிட்டு இருக்கிறார். அவர் அந்தப் பகுதியில் உள்ள இளம் ஆண், பெண்களை அணுகி உங்க முகத்தில் இருக்கும் கருவளையத்தைப் போக்க வேண்டுமா? ஒரு அருமையான சிகிச்சை இருக்கிறது. நீங்க பூசிக்கொள்ளும் கிரீம்களைவிட இது சக்தி வாயந்தது. ஒரு நிமிடம் தான் உங்க கருவளையம் எல்லாம் காணாமல் போய்விடும்.

இப்படிக் கூறிவிட்டு அவர்களிடம் தலைக்கு ரூ.100 வாங்கி கொள்கிறார். பின்பு அதிக விஷமுடைய ஒரு நல்ல பாம்பைக் கொண்டு வந்து முகத்துக்கு நேராக வைத்து அதுவும் நம்முடைய கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தில் வைத்து தேய்க்கிறார். இப்படி தேய்த்துவிட்டு உங்களுக்கு உறுதியா கருவளையம் போய்விடும் பாருங்கள்… எனச் சொல்லிவிட்டு அனுப்பி விடுகிறார்.

திருபுவனை அருகில் உள்ள கிராமங்களில் தற்போது குமரேசன் பற்றிய பேச்சுத்தான் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தச் சிகிச்சை முறையைச் செய்துகொள்ள வந்த சில இளைஞர்கள் பயந்து தலை தெறிக்க ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் சிலர் தங்களின் அழகுக்காகப் பயந்து கொண்டே இந்த சிகிச்சையை செய்து கொள்கின்றனர். இந்நிலையில் விஷமுடைய பாம்பை வைத்து தேய்க்கும் நூதன சிகிசை முறையைக் குறித்து பலரும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.