பிறந்த குழந்தைக்கும் முகக்கவசங்கள்!!!

  • IndiaGlitz, [Friday,April 10 2020]

 

கொரோனா பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என உலகம் முழுவதும் வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் பிறந்த குழந்தைகளுக்கு என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்ட தாய்லாந்து மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கான பிரத்யேக முகக்கவசங்களை உருவாக்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அறுவை சிகிச்சை முகக்கவசம் அல்லது N95 முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகக் கவசங்களை பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்க முடியாது. எனவே பாங்காங்கில் உள்ள பி.என்.எச் மருத்துவமனை பிறந்த குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக புதிய முகக்கவசங்களை உருவாக்கியிருக்கிறது. இந்த முகக்கவசங்கள் குழதைந்தையின் உடலில் பாதியை மறைக்கும் அளவிற்கு இருக்கிறது. பெரியவர்கள் அணிவது மாதிரி முகத்தை ஒட்டி இறுக்கத்தை ஏற்படுத்தாத வண்ணம் இந்த முகக்கவசங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

தாயின் கர்ப்பப்பையில் இருந்து வெளியே வந்தவுடன் பிறந்த குழந்தைக்கும் பாதுகாப்பில்லாத தருணத்தில் இதுபோன்ற ஏற்பாடுகள் மிகவும் வரவேற்கத் தக்கது என இந்தப் புதிய முயற்சிக்குத் தற்போது பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். தாய்லாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2423 ஆக உயர்ந்து காணப்படுகிறது. உயிரிழப்பு 32 ஆகவும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கையில் தாய்லாந்து அரசாங்கம், இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பொதுக்கூட்டங்களுக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. 

More News

அல்லு அர்ஜூன் படத்திற்காக போட்டி போடும் சிம்பு - சிவகார்த்திகேயன்? 

கடந்த சில ஆண்டுகளாக தமிழில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள் பிற மொழிகளிலும், பிற மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் தமிழ் மொழியிலும் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது 

இணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்!!!

கொரோனா ஊரடங்கில் சினிமாத்துறை கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது.

ஊரடங்கால் மனைவியை பிரிந்த கணவர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வரும் நிலையில் ஒருசில உயிர்களும் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நியூஜெர்ஸியில் ரொம்ப மோசம்: சுந்தர் சி நாயகியின் பதட்டமான வீடியோ

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் மிக அதிகமாக இருந்து வருகிறது என்பதும், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தற்போது உச்சகட்டத்தில் இருப்பதால்

கொரோனாவை கட்டுப்படுத்த கட்டாயம் செய்ய வேண்டிய வழிமுறைகள் ICMR அறிவிப்பு!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் மூத்த விஞ்ஞானியான ராமன் கங்காகேத்கர் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று இன்னும் மூன்றாவது கட்டத்தை எட்டவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.