திருமணமான 2 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்: ரகசியமாக பெற்றோரே புதைத்த மர்மம் என்ன?

  • IndiaGlitz, [Thursday,July 09 2020]

திருமணமான இரண்டே ஆண்டுகளில் புதுப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதும் அவருடைய பிணத்தை அவருடைய பெற்றோர்களே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் என்ற பகுதியைச் சேர்ந்த 23 வயது செந்தாமரை என்ற பெண்ணுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து தனது அம்மா வீட்டிற்கு வந்த செந்தாமரை, திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலையை அனைவரிடமிருந்தும் மறைத்த அவரது பெற்றோர் இரகசியமாக யாருக்கும் சொல்லாமல் உடலை புதைத்துவிட்டதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செந்தாமரையின் சடலத்தை தோண்டி எடுத்து போஸ்ட்மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்துள்ளனர். அதன் பிறகுதான் செந்தாமரை கணவர் வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செந்தாமரையின் கணவர் வீட்டினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் செந்தாமரை திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவரை காதலித்து வந்ததாகவும் அந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அவரை சமாதானப்படுத்தி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் தெரியவந்தது.

ஆனால் திருமணம் ஆனதிலிருந்து செந்தாமரை மிகுந்த சோகத்துடன் இருந்ததாகவும் அவருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த செந்தாமரை அம்மா வீட்டுக்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே இது கொலையா? அல்லது தற்கொலையா? என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

More News

4 வயது மகனுடன் படகு சவாரி செய்த பிரபல நடிகை திடீர் மாயம்: தற்கொலை செய்து கொண்டாரா?

பிரபல நடிகை ஒருவர் நான்கு வயது மகனுடன் படகு சவாரி செய்ய சென்றபோது திடீரென மாயமானதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சுயஇன்பம் பெட்டர்: ரசிகரின் கேள்விக்கு போல்டான பதிலளித்த ஓவியா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பெரும் புகழ்பெற்ற நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் ஏராளம் என்பதும் அவர் டுவிட்டரில் எந்த பதிவு செய்தாலும் அதற்கு லட்சக்கணக்கான லைக்ஸ்கள் குவியும்

சிபிஎஸ்இ பாடத்திட்ட குறைப்பிற்கு அஜித், தனுஷ் பட நடிகை கண்டனம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் கல்வியாண்டு குறையும் என்பதால் மாணவா்களின் கல்விச் சுமையை குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக நேற்று அறிவித்தது

மரண பீதியை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக்!!! இந்தியாவுல கூட இருந்ததா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதுத்தகவல்!!!

சீனாவின் மங்கோலியா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புபோனிக் பிளேக் எனப்படும் புதிய வகை வைரஸ் நோய்த்தொற்று பரவியிருப்பதாக அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

உன் 'மாஸ்டர்'பிளான் தான் என்ன? விஜய்சேதுபதிக்கு பார்த்திபன் கேள்வி

விஜய்சேதுபதி நடித்த 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று வெளியாகி விஜய்சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது.